ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சஞ்சய் தத் வாழ்க்கையை அவரது நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி, படமாக இயக்கி வருகிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் நடிக்கிறார். ரன்பீருடன் மனீஷா கொய்ராலா, பரேஷ் ராவல், விக்கி கவுசல், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகின.
சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் அவர் சிறை சென்ற சம்பவமும் முக்கியமானது. புனே, எரவாடா சிறையில் தான் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இதற்காக பிரத்யேக சிறை செட்டை உருவாக்க இயக்குநர் ராஜ்குமார் முதலில் எண்ணினார். ஆனால் தயாரிப்பாளர் நிகில் அத்வானி இயக்கும் லக்னோ சென்ட்ரல் என்ற படத்தில் ஒரு பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இதையே சிறை போன்று சற்று மாற்றி தனது படத்தை இயக்க ராஜ்குமார் எண்ணினார். அதன்படி அவரும், நிகில் அத்வானியிடம் அனுமதி கேட்டிருக்கிறார். நிகில் சம்மதம் சொல்ல இப்போது புனே எரவாடா சிறை போன்ற மாதிரி செட், லக்னோ சென்ட்ரல் செட்டில் அமைக்கப்பட்டு சஞ்சய் தத்தின் சிறைக்காட்சி படமாக்கப்பட இருக்கிறது.
சஞ்சய் தத் வாழ்க்கை படம் வருகிற கிறிஸ்துமஸ் நாளில் ரிலீஸாக இருக்கிறது.