அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
'கத்தி' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் இயக்கி வரும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படப்பிடிப்பும் முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் தலைப்பை எப்போது அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் நேற்று படத்தின் இயக்குனர் முருகதாஸ் நேற்று அறிவித்தார்.
“ஜுன் 23ம் தேதி எங்களது விருந்தினராக தியேட்டர்களில் இருங்கள், ஆர்வத்துடன் இருக்கிறேன்,” என டிவீட்டியுள்ளார் முருகதாஸ். “காத்திருக்கிறேன் சார், கொண்டாட வேண்டிய நாள்” என படத்தின் நாயகன் மகேஷ் பாபுவும் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.
படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதைத் தொடர்ந்து விரைவில் படத் தலைப்பை அறிவிக்க வாய்ப்புள்ளது.