இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைகளுக்கு ஆளானதை கண்டித்து மலையாள திரையுலகமே ஒன்று திரண்டு கூட்டம் நடத்தி தங்களது கண்டனங்களை தெரிவித்தது. அதில் பேசிய அனைவரும் நடிகைகளின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யவேண்டும் என்கிற விதமாக பேசினார்.. ஒரு சிலர், நடிகைகள் தனியாக டாக்சியில் செல்லாமல் தக்க துணையுடன் செல்லவேண்டும் என அறிவுறுத்தி பேசினார்கள்.. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை ஒருமித்த கருத்தாக வெளிபடுத்தினார்கள்...
ஆனால் இந்த கண்டனக்கூட்டம் பற்றி லவ் 24x7 என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீபாலா மேனன் என்பவர் வேறு கோணத்தில் தனது கருத்தை கிண்டலாக கூறியுள்ளார். அதாவது பெண்கள் அப்படியிருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்.. ஆனால் ஆண்கள் தங்களது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் கூட வலியுறுத்த மாட்டீர்கள்.. அப்படித்தானே..?” என கொஞ்சம் கோபமாகவே கேட்டுள்ளார்.. தற்போது தமிழில் பிரபலமாக நடித்துவரும் நிகிலா விமலை இவர்தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.