‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப் சம்பந்தபட்டிருப்பதாக சிலர் கொளுத்திப்போட, இன்னொரு பக்கம் இயக்குனர் சித்தார்த் பரதனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.. தமிழில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் பரதனின் மகன் தான் இந்த சித்தார்த் பரதன்.. மலையாள குணச்சித்திர நடிகையான கே.பி.ஏ.சி லலிதா தான் இவரது அம்மா..
“குற்றவாளி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டதற்காக கேரள போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. அதேசமயம் இந்த விவகாரத்தில் எதற்காக என் மகனின் பெயரை சிலர் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை.. அப்படி என் மகன் மீது தவறு இருப்பதாக தெரியவந்தால் அவன் மீது நடவடிக்கை எடுங்கள்... தண்டியுங்கள்” என ஆவேசமாக கூறியுள்ளார் நடிகை கே.பி.ஏ.சி லலிதா.. இந்த சித்தார்த் பர்பாதன் நடிகர் திலீப் படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் கடந்த வருடம் மிகப்பெரிய விபத்தில் சிக்கி, கிட்டத்தட்ட மறுபிறவி எடுத்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.