வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. ரான் பேபி ரன்' படஹ்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலை வைத்து அடுத்தடுத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன. இருந்தாலும் மோகன்லால்-ஜோஷி கூட்டணி இப்போது புதிய படத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இதற்கான ஸ்டெப்பை மோகன்லாலே எடுத்துள்ளார். காரணம் ஜோஷி போன்ற இயக்குனர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்பதுதான் மோகன்லாலின் எண்ணம்.
கடந்த சில வருடங்களாக எதுவும் பெரிய ஹிட் கொடுக்காததால், அடுத்து தாங்கள் இருவரும் இணையும் படம் இழந்த பார்மை மீட்டுத்தரவேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜோஷி ஸ்கிரிப்ட்டை தயார்செய்து வருகிறாராம். அதற்காகவே தனது வழக்கமான கதாசிரியர்களை விட்டுவிட்டு, 'புலி முருகன்' சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவுடன் கூட்டணி அமைத்துள்ளாராம் ஜோஷி. மோகன்லால் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் விரைவில் இந்தப்படம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.