தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
யானை மேல குதிரை சவாரி உள்பட சில படங்களில் நடித்தவர் கன்னட நடிகை அர்ச்சனா சிங். தற்போது பாபநாசம் படத்தில் கெளதமியின் தம்பியாக நடித்த அபிஷேக் நாயகனாக நடிக்கும் மெருலி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர வேறு சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டிருப்பதாக சொல்கிறார் அர்ச்சனா சிங்.
அவர் கூறும்போது, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதில் மெருலி தமிழ்ப்படத்தில் துணிச்சலான நிருபர் வேடத்தில் நடிக்கிறேன். சில சமூக விரோதிகள் பற்றிய தகவல்களை பத்திரிகையில் வெளியிட்டதால், பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் வேடம். அதிலிருந்து நான் எப்படி தப்பித்து வெளியே வருகிறேன். குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுகிறேன் என்பது போன்ற கேரக்டர். அதனால் இந்த படம் தமிழில் எனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.