'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் அமீர். பருத்திவீரன் வெற்றிக்குப் பிறகு யோகி என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் வெற்றியடையவில்லை. அதன் பிறகு மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்து, ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் தேறவில்லை.
சில காலம் அமைதியாக இருந்தவர், ஆதம்பாவா என்பவரை இயக்குநராகப்போட்டு 'பேரன்பு கொண்ட பெரியோர்களே' என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படமும் தற்போது கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், அமீர் இயக்கத்தில் ஆர்யாவும், அவரின் தம்பி சத்யாவும் இணைந்து நடிக்கும் 'சந்தனத்தேவன்' படத்தின் அறிவிப்பு பொங்கல் சமயத்தில் வெளியானது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப்படத்தில் அமீரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக 'பட்டதாரி' படத்தில் நடித்த அதிதி மேனன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் மேலும் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் அமீர். சந்தனத்தேவன் படத்தில் மேலும் இரண்டு கதாநாயகிகள் இருப்பது தெரிந்ததும் அதிதி மேனன் படு அப்ஸெட்டில் இருக்கிறாராம்.