தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. விழாவில் புதிய தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:
எனக்கு பதவி ஆசை கிடையாது. சினிமாவை நம்பி உள்ள மக்களுக்கு நண்மை செய்வதற்காக வந்திருக்கிறேன். இயக்குனர் சங்க செயலாளர், பெப்சி தலைவர், தயாரிப்பாளர் என்கிற எந்த தகுதியையும் நான் விரும்பவில்லை. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி என்கிற அடையாளத்தையே விரும்புகிறேன்.
பெப்சியில் முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் இருக்கலாம் அவற்றை விட்டுத் தள்ளுங்கள். இனி நடப்பதை பற்றி பேசுவோம். ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். பெப்சி தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கி உள்ள இடத்தில் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக வங்கியில் கடன் பெற்றுத் தரப்படும். 50 சதவிகிதம் மானியமாக வழங்கப்படும். பெப்சியின் முன்னாள் தலைவர்களை கொண்ட ஆலோசனை குழு அமைத்து செயல்படுவோம்.
சம்பள பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. பெப்சி தொழிலாளர்களுக்கு சம்பளத்தை செட்டில் பண்ணாமல் படத்தை வெளியிட முடியாது என்கிற நிலையை ஏற்படுத்துவோம். இதற்காக நாம் கடினமாக நடந்து கொள்ளத் தேவையில்லை. தயாரிப்பாளர்களே பெப்சிக்கு சம்பள பாக்கி வைக்க கூடாது என்று நினைக்கிற நிலையை உருவாக்குவோம். காரணம் தயாரிப்பாளர்கள்தான் நம் முதலாளிகள். அவர்களால்தான் நாம். அதனால் அமைதியான முறையில், கன்னியமான முறையில் நமது தேவைகளை கேட்டுப் பெறுவோம். இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் என்னைத்தான் தலைவராக நிற்க சொல்வீர்கள் அந்த அளவுக்கு எனது பணிகள் இருக்கும். ஆனால் நான் நிற்க மாட்டேன். மற்றவர்களுக்கு வழிவிட்டு விலகுவேன். இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.
புதிய நிர்வாகிகளை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன், பிலிம் சேம்பர் செயலாளர் காட்ரகட்டா பிரசாத் உள்ளிட்ட பலர் வாழ்த்தினார்கள்.