வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் திறமையான நடிகை கங்கனா ரணாவத். எப்படிப்பட்ட ரோலிலும் நடித்து பெயர் வாங்குபவர். விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛ரங்கூன்' படத்தில் சைப் அலிகான், ஷாகித் கபூருடன், கங்கனாவும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும், பாலிவுட்டில் உள்ள மூன்று கான் நடிகர்கள் பற்றியும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது....
ரங்கூன் படத்தில் நடிக்க என்ன காரணம்.?
மூன்று விஷயங்கள்.... ஒன்று படத்தின் இயக்குநர் விஷால் பரத்வாஜ், மற்றொன்று படத்தில் எனக்கான கேரக்டர். விஷால் கதை சொன்ன விதம் போன்றவை தான் என்னை இப்படத்தில் நடிக்க தூண்டியது. மேலும் படத்தின் மையக்கதையே என்னை சுற்றி தான் நகரும்.
ரங்கூன் படம் பற்றியும், உங்க ரோல் பற்றியும் சொல்லுங்க...?
‛ரங்கூன்' ஒரு காதல் படம். ஜூவாலா தேவி எனது பெயர், ஜூலியா என்று எல்லோரும் அழைப்பார்கள். ஜூலியாவை சுற்றி நடக்கும் காதல் சம்பவங்கள் தான் படம். சைப், சாகித் மற்றும் எனக்கு இடையேயான முக்கோண காதல் கதையாக இருக்கும். சைப் அலிகான் சினமா பட இயக்குநராகவும், சாகித், ராணுவ வீரராகவும் நடித்துள்ளனர்.
ரங்கூன்-க்காக அமெரிக்கா சென்று பயிற்சி எடுத்ததாக கேள்விப்பட்டோம், உண்மையா...?
உண்மை தான், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடிப்பு பயிற்சி பெற்றேன். எனது ரோல், நடை, உடை, பாவணை போன்ற பல்வேறு விஷயங்களுக்காக பயிற்சி எடுத்தேன். குறிப்பாக பெல்லி நடனத்திற்காக நடன பயிற்சியும் பெற்றேன்.
சைப் - சாகித் உடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...?
இருவருடனும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, இருவரும் நல்ல திறமையான நடிகர்கள். விஷால் பரத்வாஜ், சைப், ஷாகித் ஆகியோருடன் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளேன். சைப், அழகான நடிகர், சாகித் கொஞ்சம் ரிசர்வ் டைப்.
சினிமாவிற்கு வந்து இவ்வளவு காலமாகியும் இன்னும் நீங்கள், கான் நடிகர்களுடன் நடிக்கவில்லையே...?
தனிப்பட்ட காரணம் என்று எதுவும் கிடையாது. எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குமானால் எப்படிப்பட்ட படத்திலும் நான் நடிப்பேன். கான்களின் படத்தில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. இன்றைக்கு ‛சிம்ரன்', ‛ராணி லக்ஷிபாய்'... என பல நல்ல கேரக்டருடன் கூடிய பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன, அப்படி இருக்கையில் நான் எதற்காக கான்களின் படங்களில் நடிக்க வேண்டும்...?!
ரங்கூன் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறீர்களா...?
நெருக்கமான காட்சிகள் தவிர்த்து ரங்கூன் படத்தில் போர்க்காட்சிகளும் உள்ளது. நெருக்கமான காட்சிகள் என்று பார்த்தால் வழக்கமான முத்தக்காட்சி இருக்கும் அவ்வளவுதான். இது எங்களது வேலை, நடிக்க வந்தபிறகு எங்களது வேலையை திறம்பட செய்ய வேண்டும். இதில் சவுகரியமா...?, அசவுகரியமா...? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இடம் கிடையாது.