ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவிடம் கே.எஸ்.ரவிக்குமார் கூறிய கதை பிடித்துப்போனதால் உடனடியாக படத்தின் வேலைகளை துவங்கச்சொல்லி விட்டாராம் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரை உலகிற்கு ஏற்ற பக்கா கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் மூன்று நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும் அவர்களுக்கான தேடலில் கே.எஸ்.ரவிக்குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. நடிகை தமன்னா மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வாலிடம் இப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னதாகவே ப்ரீபுரொடக்ஷன் வேலைகளை கே.எஸ்.ரவிக்குமார் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.