ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் பாக்யதேவதா, லவ் 24 எக்ஸ் 7 ஆகிய படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் நிகிலா விமல். தமிழில் மா.கா.பா. ஆனந்துக்கு ஜோடியாக பஞ்சுமிட்டாய் என்ற படத்தில் கமிட்டானார். தமிழே தெரியாமல் தமிழுக்கு வந்தவர் அந்த படத்துக்காக தமிழை கற்றுக்கொண்டு நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பஞ்சுமிட்டாய் படம் பைனான்ஸ் பிரச்சினையால் கிடப்பில் கிடந் தது. நான்கு வருடங்களுக்குப்பிறகு இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த படம் கிடப்பில் கிடந்தபோது சசிகுமார் நடித்த வெற்றி வேல், கிடாரி என இரண்டு படங்களில் அடுத்தடுத்து நாயகியாக நடித்தார் நிகிலா. அந்த படங்கள் ஓரளவு வெற்றி பெற்றபோதும், எதிர்பார்த்தபடி அவருக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதனால் மறுபடியும் மலையாளத்துக்கு சென்று ஒரு படத்தில் செகண்ட் லீடாக நடிப்பதாக சொல்லும் நிகிலா விமல், அடுத்தபடியாக தமிழிலும் தனக்கான கேரக்டர் பேசும்படியாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது நாயகி வேடங்களில் நடிப்பதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
அதேசமயம், சசிகுமார், மா.கா.பா.ஆனந்த் போன்ற நடிகர்களுடன் நடித்து விட்டதால் புதிய படங்களிலும் புதுமுக நடிகர்கள் அல்லாத ஓரளவு பரிட்சயமான நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவே தான் விரும்புவதாகவும் கூறுகிறார் நிகிலா விமல்.