பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பிப்ரவரி 5ந் தேதி தேர்தல் நடக்கும் என்று தயாரிப்பாளர் சங்க செயற்குழு அறிவித்தது. அதன் பிறகு தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ராஜேஷ்வரன் வந்த பிறகு அவர், மார்ச் 5ந் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவித்து தேர்தல் அட்டவனையையும் வெளியிட்டார். இந்த நிலையில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிட்டதால் அதனை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர். இதனால் தேர்தல் அதிகாரி அறிவித்தபடி மார்ச் 5ந் தேதி தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிட தடை எதுவும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால் தேர்தல் அதிகாரி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அதோடு புதிய தேர்தல் அட்டவனையும் வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்தல் வருகிற ஏப்ரல் 2ந் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் மார்ச் 1ந் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்ற தெரிவித்திருக்கிறார்.
தற்போது, தலைவர் பதவிக்கு விஷால், கேயார், டி.சிவா, பிரகாஷ்ராஜ், ராதாகிருஷ்ணன், கலைப்புலி சேகரன் ஆகிய 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் விஷால், கேயார், ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் இறுதி களத்தில் நிற்பார்கள் என்று தெரிகிறது.