ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பாவனா கடந்த சில தினங்களுக்கு முன்பு காம வெறியர்கள் சிலரால் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் "குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்" என்று பாவனா கூறியிருக்கிறார். பாவனா ஹனி பீ 2 படத்தில் நடித்த போதுதான் கடத்தல் சம்பம் நடந்தது. இந்த படத்தின் 50 சதவிகித படப்பிடிப்புதான் முடிந்திருக்கிறது. சுபாப்தெக்கல் சுந்தரம் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் நிலையில் இருக்கிறது. வில்லக்குமரம் படப்படிப்புகள் முடிந்து விட்டது. அட்வென்ஜர் ஆஃப் ஓமனகுட்டன் படமும் முடிந்து விட்டது. ஆதம் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குவதாக இருந்தது. இப்படி பாவனா தொடர்புடைய பல படங்கள் முடிந்தும் முடியாமலும் இருக்கிற நிலையில் பாவனா இவ்வாறு கூறியுள்ளது, சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிருத்விராஜுடன் ஒரு படத்தில் நடிக்க சமீபத்தில் பாவனா ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இந்தப் படத்திலிருந்து அவர் விலகுவதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து பிருத்விராஜ் கூறும்போது "பாவனாவும் நானும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தோம். இப்போதுள்ள சூழ்நிலையில் இதுகுறித்து அவரிடம் நான் பேசினேன். அப்போது தன்னிடம் தவறாக நடந்த அனைவரும் தண்டிக்கப்படும்வரை கேமரா முன் நிற்க மாட்டேன்" என்று கூறிவிட்டார். என்கிறார் பிருத்விராஜ்.