ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சந்தானம் காமெடியனாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜாங்கிரி மதுமிதா. அதன்பிறகு மிரட்டல், ராஜாராணி உள்பட பல படங்களில் அவருடன் நடித்தார் மதுமிதா. ஆனால் சந்தானம் ஹீரோவான பிறகு மதுமிதாவை கண்டுகொள்ளவில்லை. அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் தனக்கு காமெடி வேடம்கூட தராததை நினைத்து பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் மதுமிதா.
அதேசமயம், நளனும் நந்தினியும், ஜில்லா,வெள்ளைக்காரதுரை ஆகிய படங்களில் தனக்கு சான்ஸ் கொடுத்த சூரியை தற்போது பெரிதாக நம்புகிறார் மதுமிதா. அந்தவகையில், இதுவரை மூன்று படங்களில் சூரியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள மதுமிதாவுக்கு தற்போது விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் மீண்டும் சூரிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத் துள்ளது. அதனால் உற்சாகத்தில் காணப்படுகிறார் மதுமிதா.
இந்த உற்சாகத்துக்கு இன்னொரு காரணமும் உள்ளது. இந்த படம் வட சென்னை கதையில் உருவாகிறது. ஜாங்கிரி மதுமிதா நிஜமாலுமே வட சென்னையைச்சேர்ந்தவர். இதுவரை அவருக்கு முழுமையாக வடசென்னை தமிழ் பேசி நடிக்கும் வாய்ப்பு எந்த படத்திலும் கிடைக்கவில்லையாம். அதனால் இந்த படத்தில் பர்பாமென்ஸ்ரீதியாக மட்டுமின்றி, வடசென்னை தமிழில் பேசி ஒரு கலக்கு கலக்கி விட வேண்டும் என்றும் திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார் ஜாங்கிரி மதுமிதா.