டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காவியா சினிமாஸ் மற்றும் ரிச் மீடியா சொல்யூஷன் சார்பில் எஸ்.பிரேம் குமார், என்.சுவேதா தேவி தயாரிக்கும் படம் ஜூலியும் நான்கு பேரும். ஆர்.வி.சதீஷ் இயக்குகிறார், பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார், ரகு சரவண் குமார் இசை அமைக்கிறார். இயக்குனர் சதீசுடன் அமுதவன், ஜார்ஜ் விஜய், யோகானந்த், ஆல்யா மானசா உள்பட பலர் நடிக்கிறார்கள். அனைவரும் புதுமுகங்கள், இது சர்வதேச நாய் கடத்தலை மையமாக கொண்ட காமெடி படம் என்கிறார் இயக்குனரும், ஹீரோக்களில் ஒருவருமான ஆர்.வி.சதீஷ்.
மேலும் அவர் கூறியதாவது: கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது. அமெரிக்காவில் கடத்தப்படும் இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட “ஜூலி” என்கிற அதிர்ஷ்ட நாய், நாய் கடத்தல் கும்பலின் தலைவனான வில்லன் மூலமாக இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது. மறுபுறம், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகராக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் எனும் இளைஞரும், நண்பர்களாகின்றனர். வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு கன்சல்டன்சியிடம் பணத்தை பறிகொடுக்கின்றனர்.
விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சம்பாதிக்க “ஜூலி நாயை” கடத்துகின்றனர். கோடிக்கணக்கில் மதிப்புள்ள கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களை துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக, நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாக எடுத்துச்செல்கிறது, இப்படம். அதிர்ஷ்ட நாய் ஜூலி யாரிடம் சேர்கிறது என்பதும், எல்லோரிடமிருந்தும் எப்படி நால்வரும் தப்பிக்கிறார்கள்?, விட்ட பணத்தை அடைந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. என்கிறார் இயக்குனர் ஆர்.வி.சதீஷ்.