மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
இங்கே தமிழ்நாட்டில் ரஜினி நடித்த பழைய படங்களின் டைட்டில்களை க்யூவில் நின்று கெஞ்சி கூத்தாடி வாங்கி, அதை தங்களது படங்களுக்கு வைத்துகொண்டு இருக்கிறார்கள் இளம் ஹீரோக்கள்.. ஆனால் மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டியோ ரஜினி பட டைட்டில்களை ஜஸ்ட் லைக் தட் தனது படங்களுக்கு சூட்டிக்கொள்கிறார்.. போக்கிரி ராஜா, ராஜாதி ராஜா இதெல்லாம் மம்முட்டி பட டைட்டில்கள் தான்..
இதில் கடந்த 2014ல் தான் ராஜாதி ராஜா படம் வெளியானது இந்தப்படத்தை அஜய் வாசுதேவ் என்பவர் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட பாட்ஷா பாணியிலான கதை.. அதில் ஆட்டோ ட்ரைவர் ரஜினிக்கு பதிலாக, இதில் வேட்டி கட்டிய மம்முட்டி.. அவ்வளவுதான்.. இந்தப்படத்தின் கதையை உதயகிருஷ்ணா, சிபி கே.தாமஸ் என இரண்டு பேர்(!?) எழுதியிருந்தார்கள்.. பாட்ஷாவை அப்பட்டமாக காப்பி அடித்து எழுதுவதற்கு இரண்டு பேரா..? ஒரு உதவி இயக்குனரே இந்த வேலையை செய்துவிட்டு போய்விடுவாரே.. இந்தப்படத்தின் இயக்குனர் அஜய் வாசுதேவ் மம்முட்டியிடம் எப்படி கதை சொல்லி மயக்கினார் என்றெல்லாம் அப்போது விமர்சனத்தில் குறிப்பிட்டு கிண்டலடித்தார்கள்..
ஆனால் அப்பட்டிப்பட்ட திறமை (!) வாய்ந்த இயக்குனர் அஜய் வாசுதேவ் தனது அடுத்த படத்தையும் மம்முட்டியை வைத்தே இயக்குகிறார்.. இது வெறும் யூக செய்தி அல்ல.. நேற்று பிரஸ்மீட் வைத்தே இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள் இயக்குனர் அஜய் வாசுதேவும் கதாசிரியர் உதயகிருஷ்ணாவும். 'புலி முருகன்' என்கிற பிளாக்பஸ்டர் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா இவர் தான் என்பதால் மம்முட்டி இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.