ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் 7 முன்னணி ஹீரோக்களுக்கு 'ரெட் கார்டு' போட்டதாக கடந்த சில நாட்களாக ஒரு பரபரப்பு இருந்தது. அதைத் தொடர்ந்து பிரபல வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் அப்படி யாருக்கும் தடை போடவில்லை என விளக்கமளித்திருந்தார். அதே சமயம் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து வெளிவந்த படங்கள் வசூலைத் தரவில்லை, அந்தப் படங்களால் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம்தான் என்றும் கூறியிருந்தார்.
அதிலும் குறிப்பாக 'கபாலி' படத்தால் நஷ்டம்தான் ஏற்பட்டது. ஆனால், 50 நாள், 75 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள், 200 நாள் என ஓடாத படத்திற்கு விளம்பரம் செய்வது நியாயமா ? என தயாரிப்பாளர் தாணுவுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். 'கபாலி' படம் பற்றிய உண்மை நிலவரத்தை ரஜினிகாந்திடம் சொன்னீர்களா என்றும் கேட்டிருந்தார். 'கபாலி' படம் பற்றியும் தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் தாணு பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும் அவர் சொன்ன கருத்துக்கள் திரையுலகத்தில் கடும் சர்ச்சையைக் கிளப்பின.
இதனிடையே மதுரை, இம்பாலா தியேட்டர் ஓனர் மணிசர்மா ஒரு வாட்ஸ் அப் ஆடியோவைப் பகிர்ந்து திருப்பூர் சுப்பிரமணியம் கருத்திற்கு பதில் விளக்கம் அளித்துள்ளார். அதில் 'கபாலி' படம் அவர்களது இம்பாலா தியேட்டரில் 217 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் மணிவர்மா, மதுரை மணி இம்பாலா மல்டிபிளக்ஸ் உரிமையாளர். திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பதிவை சற்று முன் கேட்டேன். சின்ன மன வருத்தம். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன். 'கபாலி' படத்தின் 50 நாள், 100 நாள், 175 நாள், 200 நாள் இதெல்லாம் பொய்யான விளம்பரம் என சொல்லியிருந்தார்.
'கபாலி' படம் இன்று 217வது நாள், இன்று கூட மார்னிங் ஷோ 47 டிக்கெட் போயிருக்கு. படம் ரெகுலரா போயிட்டிருக்கு. நீங்க சொன்ன கருத்து தாணு சாரையும், ரஜினி சாரையும் களங்கப்படுத்துவது போலிருந்தது. நீங்களும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் தான், நானும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்.
லாபம், நஷ்டம்கறது ஒரு தொழில்ல இருக்கிறது சகஜம்தான். குறிப்பிட்டு சிலரோட பேரைச் சொல்லி குரூப்புல பதிவு பண்றது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு. 'கபாலி' படம் மிகப் பெரும் வெற்றிப் படம். மதுரை ஏரியாவில் எனக்கு பெரும் வெற்றியையும், லாபத்தையும் தந்த படம் 'கபாலி'தான்,” எனக் கூறியுள்ளார்.