பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கைதி நம்பர் 150' படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கொடி நாட்டி, எப்பொ௯தும் நான் ராஜா தான் என்பதை நிரூபித்துள்ளார் மெகாஸ்டார் சிரஞ்சீவி. சினிமாவுக்குள் மீண்டும் நுழைந்துவிட்டாலும் தற்போது தொலைக்காட்சியில் தான் நடத்திவரும் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்கிற நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் சிரஞ்சீவி.. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆட்டோ ட்ரைவரான இளைஞர் சதீஷின் ஆட்டோவில் அமர்ந்து பயணித்து ரசிகர்களையும் பொதுமக்களையும் வாய்பிளக்க செய்துள்ளார் சிரஞ்சீவி.
கோடீஸ்வரர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சதீஷுக்கு அவ்வளவாக படிப்பறிவு இல்லையென்றாலும் மிகுந்த ஊக்கத்துடன் பதிலளிப்பதையும் அவர் தொழிலில் அவர் நேர்மையாக செயல்படுவதையும் பார்த்த சிரஞ்சீவி அதனாலேயே சதீஷின் ஆசையை நிறைவேற்றி வைத்தாராம். அதுமட்டுமல்ல தனது சொந்த பணத்தில் இருந்து சதீஷுக்கு இரண்டு லட்ச ரூபாயும் வழங்கினாராம். இந்தப்போட்டியில் கலந்துகொண்ட சதீஷ் ஏற்கனவே 1.40 லட்ச ரூபாய் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.