ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளடக்கியுள்ளது. இதில் ஆர்கே செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும், எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் ஒரு அணியினரும் களமிறங்கினர். இதற்கு இன்று தேர்தல் நடந்தது. 23 சங்கங்களை சேர்ந்தவர்கள் ஓட்டு போட்டனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மாலை வெளியிடப்பட்டன. இதில் தலைவராக செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக சண்முகமும், பொருளாளராக சுவாமிநாதனும், துணை தலைவர்களாக 5 பேரும், இணைச் செயலாளர்களாக 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.