மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
சத்தம் போடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன், ஆனால் என் இயக்க பொறுப்பாளரின் கைது என்னை பேச வைக்கிறது என்று கூறியுள்ளார் நடிகர் கமல்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் வரை தொடர்ந்து டுவிட்டரில் குரல் கொடுத்து வருகிறார் நடிகர் கமல். கமலின் டுவிட்டர் பதிவுகளை பலரும் ஆதரித்து வருகின்றனர். மக்களின் குரலை அவர் பிரதிபலிப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கமலின் நற்பணி இயக்கத்தை சேர்ந்த சுதாகர் மற்றும் இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது...
‛‛இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் என் இயக்கப் பொறுப்பாளரின் கைது என்னை பேசவைக்கிறது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எமது யயக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைதாகியுள்ளனர். இது எமது பெருமையைக் கூட்டவும், அரசியல் வன்மத்தை காட்டவும் செய்கிறது.
நமது இயக்கத்தார் சற்று அதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும், தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறி மாறி வந்தாலும் நம் கட்சியற்ற கொள்கை மாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவர், போவர், நிரந்தரம் நம்நாடு.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.