டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் தயாராகி உள்ள படம் சரணம் கச்சாமி. நவீன் சஞ்சய், தனிக்ஷ் திவாரி நடித்துள்ளனர். பொம்மகு முரளி தயாரித்துள்ளார். பிரேம் ராஜ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த மாதம் தணிக்கை சான்றுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சான்றிதழ் தராமல் இழுத்தடித்துள்ளனர். படம் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி சான்றிதழ் தர தணிக்கை குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாணவர்கள் அமைப்பை சேர்ந்த 6 பேர் ஐதராபாத்தில் உள்ள தணிக்கை குழு அலுவலத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு திரும்பினார். இது குறித்து தணிக்கை அலுவலக மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.