ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரட்டை அர்த்த வசனங்களால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, இசையமைப்பாளர் அவதாரமும் எடுக்கப் போகிறாராம். தான் அடுத்து தயாரித்து, நடித்து இயக்கும் படத்துக்கு இவரே இசையமைக்கவும் செய்கிறார். ஆரம்பத்திலிருந்தே எஸ்.ஜே.சூர்யா படங்களின் வெற்றியில் இசைக்கு பிரதான பங்கிருக்கும். முதல் இரு படங்களுக்கு தேவாவும், அடுத்தடுத்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானும் இசையமைத்தனர். கடைசியாக அவர் இயக்கிய புலி படத்துக்கும் ரஹ்மான்தான் இசை. இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா தயாரித்து, இயக்கி நடிக்கும் இசை என்ற படத்திற்கு அவரே இசையமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்துள்ள பேட்டியில், இசை படத்திற்கு நானே இசையமைக்க முடிவு செய்துவிட்டேன். இசையில் எனக்கு உள்ள ஈடுபாட்டைப் பார்த்து, ஏற்கெனவே என்னை இசைமைக்கச் சொன்னார்கள். நான்தான் அப்போதெல்லாம் மறுத்து வந்தேன், என்று கூறியுள்ளார்.