பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை பாவனாவை, பாலியல் சித்ரவதை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர், கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால், கேரள போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கேரள மாநிலம், திருச்சூரில், படப்பிடிப்பில் பங்கேற்று வீட்டுக்கு திரும்பிய நடிகை பாவனா, ஐந்து பேர் கும்பலால் கடத்தப்பட்டார். கும்பலை சேர்ந்தவர்கள், பாலியல் சித்ரவதை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய மார்ட்டின், திருச்சூரிலும், சலீம், பிரதீப் ஆகியோர் கோவையிலும், எர்ணாகுளத்தில், மணிகண்டனும் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்டு வரும், சுனில்குமார், 35, விகேஷ், 33, ஆகியோர், கோவை பீளமேட்டில் தங்கியிருப்பதாக, கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கேரள தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை விரைந்து வந்து, சில ஓட்டல்களில் விசாரித்தனர். ஆனால், இவர்கள் இங்கு தங்கவில்லை என்பது தெரிய வந்தது.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக, கேரளாவில், நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.