பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கரண் நடித்த மலையன் படத்தை இயக்கியவர் கோபி. அதையடுத்து கஞ்சா கருப்பு லீடு ரோலில் நடித்த வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் படத்தை தயாரித்த கஞ்சாகருப்பு வுக்கும், அவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் சமுத்திரகனி உள்ளிட்ட சில சினிமா நண்பர்கள் தலையிட்டு அவர்களது பிரச்சினை தீர்த்து வைத்தனர். அதையடுத்து தனது புதிய படத்தை மெகா படமாக இயக்க வேண்டும் என்று கதை ரெடி பண்ணி வந்த மலையன் கோபி, தற்போது நயன் தாராவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணி விட்டார்.
மேலும், ஆக்சன், ஹாரர், திரில்லர் கதைகளில் தற்போது நடித்து வரும் நயன்தாரா, மலையன் கோபி இயக்கும் படத்தில் சீர்காழியில் உள்ள பொட்டு அம்மன் கதையில் அம்மனாக நடிக்கிறார். அருந்ததி படத்தில் அனுஷ்கா நடித்தது போன்று அதிரடியான கதாபாத்திரத்தில் இப்படம் உருவாகிறதாம். தற்போது நடித்து வரும் கொலையுதிர் காலம் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. அதோடு, இந்த படம் நயன்தாரா நடித்த படங்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறதாம்