மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினியை வைத்து இயக்கிய லிங்கா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் மார்க்கெட் சரிவை சந்தித்தது. இருப்பினும், கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை தமிழ், கன்னடத்தில் இயக்கினார். அந்த படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் சமீபகாலமாக நடிப்பில் கூடுதல் கவனத்தை திருப்பியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
அந்த வகையில், சிகரம் தொடு, ஆடாம ஜெயிச்சோமடா, தங்கமகன், ரெமோ, றெக்க போன்ற படங்களில் நடித்தவர், தற்போது தானா சேர்ந்த கூட்டம், பள்ளிப்பருவத்திலேயே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நாயகனாக நடித்து வரும் பள்ளிப்பருவத்திலேயே படத்தில் காமெடி கலந்த ரோலில் நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பட்டுக்கோட்டையில் ஒருவார காலமாக நடந்து வரும் நிலையில், கஞ்சாகருப்பு, சிங்கம்புலியுடன் இணைந்து ரவிக்குமாரும் சில காமெடி காட்சிகளில் நடித்து வருவதாக சொல்கிறார்கள்