டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தேவி, கத்திச்சண்டை படங்களுக்குப்பிறகு சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ரம்யா என்ற கேரக்டரில் நடித்துள்ள தமன்னா, அதையடுத்து பாகுபலி-2வில் முதல் பாகத்தில் நடித்த அவந்திகா வேடத்தில் மீண்டும் நடித்துள்ளார். இதில் பாகுபலியில் புரட்சிகரமான வேடம் என்ற போதும், சிம்புவின் டிரிபிள் ஏ படத்தில் கவர்ச்சிகரமான ரோலில் நடித்துள்ளார் தமன்னா. அதையடுத்து புதிய பட வாய்ப்புகளுக்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான் வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படவாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
மேலும், இந்த படத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவிதான் ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் அவர் விலகியதால் அடுத்து தமன்னா ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது. மேலும், இந்த படம் வடசென்னை கதையில் தயாராகி வருவதால், தமன்னா ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிப்பதாக ஒரு செய்தி கசிந்து வந்தது. ஆனால் இப்போது அதுகுறித்து விசாரித்தால் தமன்னா அந்த படத்தில் ஆட்சாரமான பிராமிண் பெண்ணாக நடிப்பதாக சொல்கிறார்கள்.