'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஞானராஜசேகரன் இயக்கிய மோகமுள் படத்தில் 8 வயது சிறுவனாக நடித்தவர் துரைமணி. அதையடுத்து பல சீரியல்களில் வில்லனாக நடித்து வந்த அவர் தற் போது வானவில் டிவியில் செலிபிரிட்டி ஷோவில் தொகுப்பாளராகியிருக்கிறார்.
இதுபற்றி துரை மணி கூறும்போது:மோகமுள் படத்தில் நடித்த பிறகு நான் படித்து வந்த பள்ளியில் என்னை அனைவருமே நடிகர் என்றுதான் அழைப்பார்கள். அதன்காரணமாக நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஆனால் பின் னர் சினிமாவில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் மூன்று முறை முயற்சி எடுத்தும் செஸ்ட் இல்லை என்று அனுப்பி விட்டனர். அதனால் பின்னர் சீரியல்களில் நடித்தேன். சிவரகசியம், ஆதிரா, தெய்வமகள் என நடித்தேன். பல சீரியல்களில் வில்லனாக நடித் துள்ளேன்.
இப்போது வானவில் டிவியில் 6 மாதமாக செலிபிரிட்டி ஷோவில் ஆங்கராக உள்ளேன். நடிகனாக மட்டுமே இருந்த எனக்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதும் ஒரு புதிய அனுபவத்தைக்கொடுத்து வருகிறது. அதேசமயம் தொடர்ந்து சினிமா, சின்னத்திரைகளில் நடிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
அதனால் விரைவில் என்னை இதுவரை பார்த்ததை விட அதிரடியான வில்லன் வேடங்களில் பார்க்கலாம் என்று கூறும் நடிகர் துரைமணி, விஸ்காம் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பு எடுத்து வருகிறேன். இப்படி யாருக்கேனும் என்னால் முடிந்த உதவிகள் செய்வது மனதளவில் திருப்தியை கொடுக்கிறது என்கிறார்.