'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்துகொண்டு இருக்கின்றன.. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கேரளா போலீசார் அவர்களை விசாரித்து வருகின்றனர்.. இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பதற்காக இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவனின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை சைபர் க்ரைம் போலீசார் ஆராய்ந்தபோது அவனிடத்தில் கடைசியாக பேசிய நபர் பிரபல தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் என்பது தெரியவந்தது..
இந்த ஆண்டோ ஜோசப், மெகாஸ்டார் மம்முட்டியின் நெருங்கிய நண்பர்.. சொல்லப்போனால் மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் என்கிற நிலையில் பின்புலமாக இருந்து செயல்பட்டு வருபவர்.. யாவருடைய அழைப்பு எப்படி குற்றவாளியின் போனில் என அதிர்ச்சியடைந்த போலீஸார் இவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான் இவரது அழைப்பு ஏன் குற்றவாளியின் செல்போனில் பதிவானது என சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஆண்டோ ஜோசப்..
அதாவது பாவனா விவகாரம் தொடர்பாக நடிகர் லால் போலீஸ் மற்றும் முக்கிய திரையுலக பிரபலங்களிடம் தகவல் கொடுத்து வந்துள்ளார்.. அதில் ஆண்டோ ஜோசப்பும் அடக்கம்.. இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே ஆண்டோ ஜோசப், தனக்கு நெருங்கிய நண்பரான எம்.எல்.ஏ பி.டி.தாமசையும் அழைத்துக்கொண்டு லால் வீட்டிற்கு விரைந்துள்ளார். அங்கே இந்த குற்றத்திற்கு உதவியாக இருந்த ட்ரைவர் மார்ட்டினை போலீஸார் பிடித்து வைத்திருக்கவே, அவனிடம் எம்.எல்.ஏ தாமஸ் விசாரித்து பல்சர் சுனிலின் நம்பரை கேட்டு வாங்கினார்..
பின்னர் அந்த நம்பரை ஆண்டோ ஜோசப்பின் செல்போனில் இருந்து அழைத்து அழைத்துள்ளனர்..
இரண்டுமுறை போனை எடுக்காத சுனில் மூன்றாவது முறையாக போனை எடுத்தது யார் என கேட்க, தான் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் என இவர் சொன்னதும் போனை கட் பண்ணிவிட்டானாம் சுனில். ஆக அனைவரின் முன்னிலையில் அதுவும் சம்பவம் நடைபெற்ற பின்னரே தனது போனில் இருந்து குற்றவாளிக்கு அழைப்பு போனது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் ஆண்டோ ஜோசப்.