‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
நடிகர் கார்த்தி பங்குதாரராக உள்ள பட நிறுவனம் 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்'. இந் நிறுவனம் 'மாயா' படத்தைத் தயாரித்தது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாநகரம்' என்ற படத்தை தயாரித்ததுள்ளது. தெலுங்கு நடிகர் சந்தீப் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில், ஸ்ரீ, ரெஜினா, முனீஷ்காந்த், சார்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எடிட்டர் பிரவீன் கே.எல், மாநகரம் படத்தின் பிரத்யேக காட்சியை சமீபத்தில் பார்த்துவிட்டு, படம் குறித்த தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
''இளைஞர் கூட்டமொன்றின் திறமையால் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். பார்வையாளர்கள் அனைவரும் படத்தின் முதல் காட்சியிலேயே படத்திற்குள் இழுக்கப்பட்டோம். திரைப்பட உருவாக்கத்தின் அத்தனை தடைகளையும் எழுத்து, இயக்கம் மூலம் தகர்த்துள்ளார்கள். எழுத்திலிருக்கும் உணர்ச்சிகளை திரையில் கொண்டு வருவது அத்தனை எளிதான காரியமல்ல. ஆனால், தனது தனித்துவமான பாணியில் அதனை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ். இப்படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்றவை நீண்டகாலத்திற்கு பேசப்படும். சார்லி சார், சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, முனீஷ்காந்த் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு,“உணர்வுப்பூர்வமான உழைப்பிற்காகவே இப்படம் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டுமென வாழ்த்துகிறேன்! சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம். நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும்!'' என்றும் குறிப்பிட்டுள்ளார் எடிட்டர் பிரவீன். தான் பணியாற்றாத, இன்னொரு எடிட்டர் பணியாற்றிய படத்தை மனம் திறந்து பாராட்டிய எடிட்டர் பிரவீனை அவரது நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளனர்.