இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விஷயத்தில் பலரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று ஒருபக்கம் ஆவேசமாக பேசிக்கொண்டிருக்க, இன்னும் சிலரோ பாவனாவின் திருமணம் விரைவில் நடைபெற இருந்த நிலையில் இதை அவரது வருங்கால கணவரும் அவரது குடும்பத்தாரும் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கிறார்கள்.. நம் சமூகம் இருக்கும் நிலையில் அப்படி நினைக்க தோன்றுவதும் இயல்பான ஒன்றுதானே.. ஆனால் இந்த விவாகரத்தில் பாவனாவிற்கு அவரது வருங்கால கணவரும் அவரது குடும்பமும் மிகவும் ஆறுதலாக இருந்து வருவதாக நடிகரும் இயக்குனருமான லால் கூறியுள்ளார்..
பத்து வருடங்களுக்கு முன்பே தமிழில் வெளியான 'தீபாவளி' படத்தில், பாவனாவின் தந்தையாக நடித்திருந்தார் லால்.. தவிர பாவனா தற்போது நடித்துவரும் 'ஹனி பீ-2' படத்திலும் இதன் முதல் பாகத்திலும் பாவனாவின் தந்தையாக நடித்திருக்கிறார் லால். படத்தை இயக்குவது அவரது மகன் ஜூனியர் லால்.. அந்தவகையில் லாலை பாவனாவின் காட் பாதர் என்றே சொல்லலாம்... கடந்த வெள்ளியன்று இரவு சில நபர்களின் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பாவனா அவர்களிடம் இருந்து விடுபட்டதும், அந்தப்பகுதிக்கு அருகில் இருந்த நடிகர் லாலின் வீட்டிற்கு சென்று, நடந்தவைகளை கூறி கதறியிருக்கிறார்.. லால் உடனே போலீஸ் மற்றும் பாவனாவின் தரப்பு ஆட்களுக்கு விஷயத்தை சொல்லி வரவழைத்திருக்கிறார்..
அந்த நள்ளிரவு நேரத்தில் விஷயம் கேள்விப்பட்டு பதறியடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளார் பாவனாவின் வருங்கால கணவர்..
அவர் இருக்கும்போதே போலீசாரின் விசாரணையும் நடைபெற்றுள்ளது.. அடுத்து வரும் நிகழ்வுகளை தைரியமாக எதிர்கொள்.. நாங்கள் உடன் இருக்கிறோம் என பாவனாவின் வருங்கால கணவர் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றி, நம்பிக்கை ஊட்டியுள்ளார். இதன்பின்னரே சற்று தேறிய பாவனா, இனி இது குறித்து கோர்ட்டில் எந்தவிதமாக அசிங்கமான கேள்விகளை கேட்டாலும் அதை எதிர்கொள்ள தயார் என தைரியமாக கூறினாராம்.. இவ்வாறு தெரிவித்துள்ளார் லால்.