வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். புராண படங்களில் நடிக்க மாட்டேன், பக்தனாக நடிக்க மாட்டேன், மது அருந்தும், புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பலவித கொள்கைகளை கடைசி வரை கடைபிடித்ததால் அவர் லட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்டார். 80 படங்களுக்கு மேல் நடித்த லட்சிய நடிகர் ராஜேந்திரனை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் தான் எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு நல்ல இயக்குனரும்கூட...
பல நாடகங்களை இயக்கியிருந்தாலும் 1960-ம் ஆண்டு தங்கரத்தினம் என்ற படத்தை இயக்கினார். இதில் மலையாள நடிகர் பிரேம் நசீரும், எம்.என்.ராஜமும் நடித்திருந்தார்கள். அதற்கு அடுத்த ஆண்டு அல்லி என்ற படத்தை இயக்கினார். 1966ம் ஆண்டு மணிமகுடம் படத்தை இயக்கினார். இதில் அவர் நாயகனாக நடிக்க நாயகியாக சி.ஆர்.விஜயலட்சுமி நடித்தார். ஜெயலலிதா இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த மூன்று படங்களையும் எஸ்எஸ்ஆர்., பிச்சர்ஸ் மூலம் அவரே தயாரித்தார்.
இதுதவிர எஸ்.எஸ்.ரஜேந்திரன் மணிமகுடம், புதுமைப்பெண் தங்கரத்தினம் படங்களில் பாடியுள்ளார், 20க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியும் இருக்கிறார். பன்முகதன்மையுடன கலைஞனாக வாழ்ந்திருக்கிறார் எஸ்.எஸ்.ஆர்.