ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை பாவனாவை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதவாது...
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாவனா. அவரை சில சமூக விரோதிகள் கடத்திச் சென்று பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதை தயாரிப்பாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். திரைப்படத் துறையில் நடைபெறும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் எப்போதும் ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.