600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
நடுநிசி நாய்கள், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மேகா, ஜீரோ உள்பட பல படங்களில் நடித்தவர் அஸ்வின் காகமனு. அவர் தற்போது இது வேதாளம் சொல்லும் கதை என்ற படத்தில் நடித்திருக்கிறார். ரதிந்தரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு வாகைசூடவா, குட்டி புலி, அமரகாவியம், உத்தமவில்லன், பாபநாசம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இது வேதாளம் சொல்லும் கதை படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
அந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், வேதாளம் சொல்லும் கதை இன்றைய காலகட்டத்து கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் ரதிந்தரன் ஆர்.பிரசாத் எனது நீண்டகால நண்பர். அவரது ட்ரீம்ஸ் எனக்கு நல்லா தெரியும். அவர் எப்பவோ டைரக்டர் ஆகியிருக்க வேண்டியவர்.அதுக்கும் டயம் வரனும்.இப்பத்தான் வந்திருக்கு.
நானும், அவரும் சேர்ந்து கொடைக்கானல் மெர்க்குரி பற்றி ஒரு மியுசிக் வீடியோ பண்ணினோம். இப்போதுகூட புறம்போக்கு என்றொரு வீடியோ பண்ணியிருக் காரு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே ஒரு குறும் படம் பண்ணியிருக்கோம்.
அவர் ஒன்றும் திடீர்ன்னு சினிமாவுக்கு வரல. அவருக்கு திறமை அதிகம். நான் இசையமைப்பாளராக அறிமுகமான வாகை சூடவா படத்திலயும் ஒர்க் பண்ணியிருக்காரு. இந்த ஸ்கிரிப்ட் எனக்கு தெரியும். யூனிக்கான ஒரு சப்ஜெக்ட். ஒவ்வொரு கேரக்டரையும் நடித்துக்காட்டுவார். சில சமயங்களில் எனக்கு பாடி காட்டியே டார்ச்சர் பண்ணுவார். அந்த அளவுக்கு ஈடுபாடாக இருப்பார்.
மேலும், இந்த படத்துக்கு குருசோசுந்தரம் கிடைச்சதும் ரொம்ப சந்தோசப்பட்டார். அந்த கேரக்டரை ரொம்ப டெடிக்கேட்டா கேண்டில் பண்ணனும். அதுக்கு இவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னபோது அவருகிட்ட ஒரு சந்தோசத்தை பார்த்தேன். இந்த படம் பிரசாத்துக்கும் மட்டுமில்லாம எனக்கும் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ஜிப்ரான்.