வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினிகாந்தைப் போன்று ராகவேந்திரா சாமிகள் மீது பற்று கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதனால் சென்னை ஆவடியில் ஒரு ராகவேந்திரா கோயில் கட்டி அதை நிர்வகித்து வருகிறார். அதேபோல் தனது அம்மா கண்மணி மீதும் அதிக பாசம் கொண்டவரான லாரன்ஸ், அம்மாவுக்காக ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அதில் வைக்கப்பட்டுள்ள தனது அம்மாவின் சிலையை ராஜஸ்தானில் வடிக்கப்பட்டு கொண்டு வந்தார்.
மேலும், சென்னை பூந்தமல்லியில் கட்டப்பட்டு வந்த அந்த அம்மா கோயில் கட்டும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. அதனால் விரைவில் கோயிலை திறக்கப்போகிறாராம் லாரன்ஸ். அந்த அம்மா கோயிலை தனது ஆன்மீக குருவான நடிகர் ரஜினியை வைத்து திறக்க அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.