10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
எம்.ஆர்.ராதா, 1907, பிப்., 21ல் சென்னையில் பிறந்தார். சிறுவயதில், தன் தந்தையை இழந்த அவர், ஆலந்துார் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். 1954ல், திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய, ரத்தக்கண்ணீர் என்ற நாடகத்தில் நடித்த, எம்.ஆர்.ராதாவின் நடிப்பை பார்த்த பலரும் திரைப்படமாக வெளியிட விருப்பம் தெரிவித்தனர்.அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 125 படங்களில், குணசித்திரம், வில்லன், கதாநாயகன் உள்ளிட்ட, பல்வேறு வேடங்களில் நடித்தவர்.எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட விரோதத்தில், 1967, ஜன., 12ல், அவரது ராமாவரம் வீட்டிற்கு சென்ற, எம்.ஆர்.ராதா அவரை துப்பாக்கியால் சுட்டார். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற அவர், 1967 - 1971 வரை சிறையில் இருந்தார். பின், ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். எம்.ஆர்.ராதா, 1979 செப்., 17ல் இறந்தார்.அவர் பிறந்த தினம் இன்று!