தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என உலகத்திலுள்ள மற்ற திரையுலகத்தினர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி சினிமா உலக அளவில் வியாபாரத்தில் 100 கோடி வசூலை அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அதற்குப் போட்டியாக தற்போது தெலுங்குத் திரையுலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
2015ம் ஆண்டு 'பாகுபலி' திரைப்படம் வெளிவந்து இந்தியத் திரையுலகினருக்கு மட்டுமல்லாமல், உலக அளவில் உள்ள திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இந்திப் படங்களைத் தவிர்த்து பல தரமான படங்களும் உருவாகி வருகின்றன என்பதை 'பாகுபலி'யின் உருவாக்கமும், வெற்றியும், வசூலும் புரிய வைத்தது. 'பாகுபலி' படம் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாராகி அந்த வரவேற்பைப் பெற்றது.
ஆனால், கடந்த வாரம் வெளிவந்த 'காஸி' திரைப்படம், 'பாகுபலி' அளவிற்கு செலவில்லாமல் உருவானாலும் ஒரு பிரம்மாண்டத்தையும், பிரமிப்பையும் கண் முன் நிறுத்தி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தை தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனர் சங்கல்ப் இயக்கியிருப்பதால் தெலுங்குத் திரையுலகினர் மிகவும் பெருமையாக தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி 'காஸி' படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “திரைக்குப் பின்னும், முன்னும் கேப்டன் மற்றும் அவரது குழுவினர் அசத்தியுள்ளார்கள்,” எனப் பாராட்டியுள்ளார்.