அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
'அழகிய தீயே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராதாமோகன். தொடர்ந்து அவர் இயக்கிய படங்களில் 'மொழி' படம் அவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக ஜோதிகா நடித்த 'மொழி' படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
அந்தப் படத்திற்குப் பின் அவர் இயக்கிய 'அபியும் நானும்' படம் மட்டுமே நல்ல படமாக அமைந்தது. 'பயணம், கௌரவம், உப்புக் கருவாடு' ஆகிய படங்கள் 'மொழி, அபியும் நானும்' படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தற்போது மீண்டும் 'மொழி' படப் பாணியில் ஒரு படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். 'பிருந்தாவனம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். காது கேளாத, வாய் பேச முடியாதவராக இப்படத்தில் நடிக்கவிருப்பதாக அருள்நிதி அறிவித்துள்ளார்.
'வம்சம்' படத்தில் நாயகனாக அறிமுகமான அருள்நிதி அதற்குப் பின் நடித்த படங்களில் 'டிமான்டி காலனி' படம் மட்டுமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. 'உதயன், மௌன குரு, தகராறு, ஆறாது சினம்' ஆகிய படங்களில் அவருடைய நடிப்பிற்கு மட்டுமே பாராட்டுக்கள் கிடைத்தது. படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
'பிருந்தாவனம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. 'பலே வெள்ளையத் தேவா' பட நாயகி தன்யா நாயகியாக நடிக்கிறார். விவேக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை 'சேதுபதி, எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தைத் தயாரித்த வன்சன் மூவீஸ் தயாரிக்கிறது.