அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தமிழ்த்திரையுலகில் பல வருடங்களாக ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்துவரும் பட நிறுவனம் - சிவாஜி புரொடக்ஷன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய இந்த பட நிறுவனம் தற்போது அவரது மகன்கள் ராம்குமார், பிரபு நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.
ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தை தயாரித்தவகையில் லாபம் ஈட்டிய சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் சில வருடங்கள் கழித்து அஜித் நடித்த 'அசல்' படத்தை தயாரித்தது. அசல் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அசல் படத்தின் தோல்விக்கு பிறகு சிவாஜி பிலிம்ஸ் வேறெந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
இந்நிலையில் தங்களின் அடுத்தடுத்த புராஜெக்ட்டிற்காக விஜய் சேதுபதியையும், ராகவா லாரன்ஸையும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படமொன்றை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அதோடு, 'சந்திரமுகி'யின் 2ஆம் பாகத்தை தயாரிப்பது பற்றியும் இயக்குநர் பி.வாசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.
'சந்திரமுகி'யின் 2ஆம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டதால், அந்தப் படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறாராம். வாசுவின் இயக்கத்தில் 'சந்திரமுகி'யின் 2ஆம் பாகமான ஆப்த ரக்ஷகா என்ற படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.