ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த்திரையுலகில் பல வருடங்களாக ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்துவரும் பட நிறுவனம் - சிவாஜி புரொடக்ஷன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய இந்த பட நிறுவனம் தற்போது அவரது மகன்கள் ராம்குமார், பிரபு நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.
ரஜினி நடித்த 'சந்திரமுகி' படத்தை தயாரித்தவகையில் லாபம் ஈட்டிய சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் சில வருடங்கள் கழித்து அஜித் நடித்த 'அசல்' படத்தை தயாரித்தது. அசல் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அசல் படத்தின் தோல்விக்கு பிறகு சிவாஜி பிலிம்ஸ் வேறெந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
இந்நிலையில் தங்களின் அடுத்தடுத்த புராஜெக்ட்டிற்காக விஜய் சேதுபதியையும், ராகவா லாரன்ஸையும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படமொன்றை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அதோடு, 'சந்திரமுகி'யின் 2ஆம் பாகத்தை தயாரிப்பது பற்றியும் இயக்குநர் பி.வாசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.
'சந்திரமுகி'யின் 2ஆம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டதால், அந்தப் படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறாராம். வாசுவின் இயக்கத்தில் 'சந்திரமுகி'யின் 2ஆம் பாகமான ஆப்த ரக்ஷகா என்ற படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.