இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு வன்முறையை தூண்டுவதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்பு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறர். அதிலும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த அன்று, ‛‛மக்கள் தங்களின் தொகுதி எம்எல்ஏ.க்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்பு கொடுங்கள், உங்களின் மன உளைச்சலை கவர்னருக்கு இ-மெயில் அனுப்புங்கள்'' என்று கவர்னரின் இ-மெயில் முகவரியையும் பதிவிட்டிருந்தார்.
கமலின் இந்த பதிவு அதிமுக., அரசுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மக்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக உள்ளது. வன்முறையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் கருத்தினை பதிவிட்ட அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.