தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களின் இரவு நேரங்களில் மட்டுமே இசையமைத்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது ஒலிப்பதிவு கூடத்தில் இரவு நேரங்கள் பட்டப்பகலாக இருக்கும். ஒருபக்கம் இசைக்கருவிகள் வாசிப்பது. இன்னொரு பக்கம் பின்னணி பாடகர் பாடகிகள் பாடுவது என ஏ.ஆர்.ரகுமானின் ரெக்கார்ட்டிங் தியேட்டரே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பது வாடிக்கை.
அவரைத் தொடர்ந்து அனிருத்தும் சமீபகாலமாக இரவு நேரங்களில்தான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இரவில் இசையமைக்கிறார் என்பதற்காக நானும் இரவு நேரத்தில் இசையமைக்கவில்லை. இரவில்தான் மற்றவர்களின் தொல்லை இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் இரவில் இசையமைக்கிறேன் என்கிறார் அனிருத்.
இந்தநிலையில், தற்போது ஜி.வி.பிரகாசும் இரவு நேரங்களில்தான் இசையமைத்து வருகிறார். அதற்கு காரணம், பல படங்களில் நடித்து வருவதால், பகலில் அவருக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லையாம். அதனால், பகலில் நடித்து விட்டு வந்து இரவு நேரங்களில் இசையமைப்பதாக சொல்லும் ஜி.வி.பிரகாஷ், ஸ்பாட்டில் ஓய்வாக இருக்கும்போது தனக்கும் தோன்றும் டியூன்களை அங்கேயே பதிவு செய்து வைத்துக்கொள்கிறாராம்.