ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2015-ல் கமல் நடிப்பில் வெளியான படம் பாபநாசம். மலையாள டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படத்தில் ஒரு காட்சியில் கமலுக்கு டூப்பாக நடித்தவர் ஜெய்பாலா. கமலின் தீவிர ரசிகரான இவருக்கு அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட தற்போது நாவல், கனலி என்ற இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதுபற்றி ஜெய்பாலா கூறுகையில், சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசை, கனவு எதுவுமே எனக்கு இருந்ததில்லை. ஒருநாள் குற்றாலத்தில் ஒரு படப்பிடிப்பு நடைபெற்ற போது வேடிக்கை பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன்.அப்போது அங்கு என்னை பார்த்த சித்ரா என்றொரு ஆர்ட்டிஸ்ட் மேனேஜர் நடிக்க ஆர்வம் உள்ளதா? என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதுகுறித்து நான் என் தந்தையிடம் தெரிவித்தபோது, உடனே சம்மதம் சொன்னார். காரணம் அவருக்கு சிறிய வயதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். அதனால் என் மூலமாக அவரது கனவை நனவாக்கிக்கொள்ள நினைத்தார்.
அதையடுத்து, திடீரென்று ஒருநாள் அந்த சித்ரா, கேரளாவில் கமல் நடித்த பாபநாசம் படப்பிடிப்பு நடந்தபோது அழைத்தார். என்ன வேடம் என்றுகூட கேட்காமல், கமல் சார் படம் என்றதும் ஆர்வத்துடன் சென்றேன். அங்கு சென்று கமல் சாரை பார்த்தபோது மிகப்பெரிய சந்தோசமடைந்தேன். சின்ன வயதில் இருந்தே கமலின் ரசிகனான என்னை அவருக்கு ஒரு காட்சியில் டூப் போட அழைத்திருந்த விசயம் அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது. உள்ளுக்குள் பயமாக இருந்தபோதும் ஒருவழியாக நடித்தேன். அந்த படத்தின் க்ளைமாக்சில் ரிப்போர்ட்டர்களுக்கு கமல் பேட்டி கொடுக்கும் காட்சியில்தான் நான் நடித்தேன்.
அதன்பிறகுதான் எனக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. இப்போது நாவல், கனலி என்ற இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறேன். இதில் நாவல் படத்தில் செல்போனினால் ஏற்படும் விபரீதத்தை சொல்லும் கதையில் நடித்திருக்கிறேன். பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த படத்தில் அதிகம் பேசாத சீரியசான வேடத்தில் நடித்துள் ளேன். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இதையடுத்து கனலி என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறேன். இந்த இரண்டு படங்களும் திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் நானும் ஒரு இடத்தை பிடித்து விடுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது என்கிறார் ஜெய்பாலா.