டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
32 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கலைச்சேவையாற்றி வருபவர் ரம்யா கிருஷ்ணன். ஆரம்ப காலத்தில் கவர்ச்சிகரமான நாயகியாக வலம் வந்த அவர், பின்னர் தெலுங்கில் அம்மன் வேடங்களில் தோன்றி வில்லன்களை பழிதீர்த்து வந்தார். அதேபோல் தமிழில் ரஜினியுடன் நடித்த படையப்பாவிற்கு பிறகு அதிரடி நாயகியாகி விட்டார். அவர் நடித்த நீலாம்பரி கேரக்டரை வின் பண்ண இப்போதுவரை நடிகைகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த வேடத்தில் சொல்லி அடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
மேலும், திருமணத்திற்கு பிறகு எல்லா நடிகைகளையும்போலவே ரம்யா கிருஷ்ணனுக்கும் சினிமாவில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டது. என்றாலும், பின்னர் சீரியல் தயாரித்து நடிக்கத் தொடங்கிய அவர், பாகுபலிக்கு பிறகு மறுபடியும் கவனிக்கப்படும் நடிகையாகியிருக்கிறார். தற்போது கமலின் சபாஷ் நாயுடு, பாகுபலி-2 படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடிக்கிறார். இதற்கு முன்பு விஜய்சேதுபதி-நயன்தாராவை வைத்து தான் இயக்கிய நானும் ரெளடிதான் படத்தில் ராதிகாவை சாப்ட்டான போலீஸ் வேடத்தில் நடிக்க வைத்திருந்த டைரக்டர் விக்னேஷ்சிவன், இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணனை கெத்தான போலீசாக நடிக்க வைத்திருக்கிறார்.