டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமா எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்தது. ஒரு ஆடு ஒரு தயாரிப்பாளரை கோடீஸ்வரராக்கிய நிகழ்வும் இங்கு நடந்தது. 80களில் கொசுவம் வைத்த சேலையும், பப்புகை வைத்த ரவிக்கையும் அணிந்த பெண்களுக்கு ஆட்டுக்கார அலமேலுவை நன்றாகத் தெரியும். தமிழ் நாட்டு பெண்கள் கோவிலுக்கு போவது மாதிரி குடும்பம் குடும்பமாக சென்று பார்த்த படம் ஆட்டுக்கார அலமேலு.
1977ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சிவகுமார், ஸ்ரீப்ரியா, ஜெய் கணேஷ், தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர். இவர்களுடன் ராமு என்ற ஆடும் நடித்திருந்தது. டைட்டில் கார்டில்கூட ஆட்டின் பெயரைப் போட்டார்கள். தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிக்க ஆர்.தியாகராஜன் இயக்கினார். வசனத்தை தூயவன் எழுதினார். ஆர்.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்தார். சங்கர் கணேஷ் இசை அமைத்தனர்.
கிராமத்தில் ராமு என்கிற ஆட்டை வளர்க்கிறவள் அலமேலு. அழகும், தெனாவெட்டும் மிக்கவள். அவளுக்கு சிவகுமார் மீது காதல். ஆனால் பணக்கார ஜமீன்தார் ஜெய்கணேசுக்கு அலமேலுவை எப்படியாவது அடைந்து அவள் திமிரை அடக்க வேண்டும் என்கிற வெறி. அவளுக்கு ஒரே உறவு அந்த ஆடுதான். அவளுக்காக எதையும் செய்யும் அந்த ஆடு. அவள் சொன்னதைச் செய்யும்.
தமிழ்நாட்டு மக்கள் மாட்டைப்போல ஆட்டையும் பாசமாக வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஆடு இருக்கும். அதனால் ஆட்டுக்கும் அவர்களுக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உண்டு. இந்த சென்டிமெண்டை கண்டுபிடித்த சின்னப்பா தேவர் ஆட்டை மையமாக வைத்து ஒரு கதை பண்ணச் சொல்லி தன் கதை இலாகவாவுக்கு உத்தரவிட்டவிட்டு கதை தயாராகும்போது நடிக்க வேண்டிய ஆட்டை வாங்கி அதற்கு ராமு என்று பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.
இந்தப் படத்தில் நடிக்க பல ஹீரோக்களை அணுகினார். ஆடுதான் முக்கிய கேரக்டர் அதற்கு அடுத்த முக்கியத்தும் அலமேலு கேரக்டருக்கு. மூன்றவது இடம்தான் ஹீரோவுக்கு என்று பலர் மறுத்து விட்டனர். இறுதியாக சிவகுமாரிடம் சென்றார். அவரோ "என்ன அண்ணே ஆடு டிரான்சிஸ்டர் பிளே பண்ணுது, ரயில்வே கேட்டை சாத்துது, சண்டை போடுது ஏன் இப்படி மக்களை முட்டாளாக்குறீங்க?" என்று கேட்டார்.
அதற்கு சின்னப்பா தேவர் "நீ சொல்றதெல்லாம் சரிதான். நாமும் நல்ல படம் எடுப்போம். அதுக்க பணம் வேணுமில்லையா. அதுக்கு இந்த படம் எடுத்தாகணும்" என்று அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். அவர் கணிப்பு வீண் போகவில்லை. படம் வெளியாகி 25 வாரங்கள் ஓடி அன்றைக்கு 2 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அந்த ஆண்டில் வெளிவந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது ஆடு.