ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
போகன் படத்தை அடுத்து வில்லன் வேடங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் ஹீரோவாகிறார் அரவிந்த்சாமி. தற்போது சதுரங்கவேட்டை-2, வணங்காமுடி, நரகாசுரன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில், சதுரங்கவேட்டை படத்தில் ஹீரோ என்றாலும், சீட்டிங் பண்ணும் ரோலில் நடிக்கிறார். அவருக்கும், திரிஷாவுக்குமிடையே நடக்கும் பிரச்சினைதான் இந்த படம்.
அதையடுத்து, அவர் நடிக்கும் இன்னொரு படம் செல்வாவின் வணங்காமுடி. இதில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் அரவிந்த்சாமி. ஒரு நியாயமான உளவுத்துறை அதிகாரிக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமியுடன், ரித்திகாசிங், நந்திதா, சாந்தினி, சாரிகா ஆகியோர் நடிக்கும் நிலையில் இன்னொரு கேரக்டருக்கு நடிகை தேடி வருகிறார்கள்.
மேலும், இந்த படத்தில் அதிரடி வில்லனாக ஹரீஸ் உத்தமன் நடிக்கிறார். இதற்கு முன்பு பாண்டியநாடு, யாகவராயினும் நாகாக்க, தனி ஒருவன், பாயும் புலி, தொடரி, றெக்க என பல படங்களில் வில்லனாக நடித்த ஹரீஸ் உத்தம னுக்கு இந்த படத்தில் நிழல் உலக தாதா வேடமாம்.