இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
1991-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் இசையமைப்பாளரானவர் செளந்தர்யன். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல் களை கொடுத்த அவர் அந்த காலகட்டத்தில் பேசப்படும் இசையமைப்பாளராக இருந்தார். இப்போதும் இசையமைத்து வருகிறார். என்றாலும் பழைய பரபரப்பானது இல்லை.
இது குறித்து செளந்தர்யன் கூறுகையில், நான் இசையமைத்த சேரன் பாண்டி யன் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய புத்தம் புது பயணம் தொடங்கி, சிந்து நதிப்பூ, முத்துக்குளிக்க வாரியளா என தொடர்ந்து படங்களுக்கு பிசியாக இசையமைத்து வந்தேன். இப்போது கதிர் எனது 50வது படம் என்றால், அதையடுத்து வெளியாகும் எனது 55வது படத்திற்கும் தற்போது சென்னையில் நான் சொந்தமாக கட்டியுள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும், காலத்திற்கேற்ற வகையில் ரசிகர்களின் மனங்கவரும் இசையை இப்போதும் நான் கொடுத்துதான் வருகிறேன். ஆனால், ஆரம்ப காலத்தைப்போன்று பெரிய டைரக்டர், நடிகர்களின் படங்கள் எனக்கு கிடைக்கவில்லை. பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்களே கிடைத்து வருவதால், சரியான விளம்பரங்கள் இல்லாமல் எனது பாடல்கள் ரசிகர்களைப் போய் சேருவதில்லை.
என்னைப்பொறுத்தவரை இப்போதைய ரசிகர்கள் விரும்பும் வகையில், மெலோடி, குத்துப்பாட்டு என புதிய படங்களில் இசையமைத்து வருகிறேன். இன்னும் பத்து வருடத்திற்கு பிறகு வரக்கூடிய இசையை இப்போதே என்னால் கொடுக்கவும் முடியும். அந்த அளவுக்கு ரசனைக்கும், காலகட்டங்களுக்கும் ஏற்ப என்னை அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் செளந்தர்யன்.