'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நம் மன உளைச்சலை கவர்னருக்கு இ-மெயில் மூலம் தெரிவியுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வரும் கமல்ஹாசன், சசிகலா அணியினர் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளார், அதேசமயம் பன்னீர் செல்வம் ஆட்சியை தொடரலாம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னர் கூட, ‛‛இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா, அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்'' என்று கமல் கூறியிருந்தார்.
இந்நிலையில், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 122 எம்எல்ஏ.,க்கள், ஆதரவு, 11 எம்எல்ஏ.,க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே கமல் தனது டுவிட்டர் பதிவில், "தமிழக மக்களே, உங்கள், உங்கள் தொகுதிகளின் எம்.எல்.ஏக்களுக்கு அவர்கள் பெற தகுதியான மரியாதையை அளித்து வரவேற்பு கொடுங்கள்" என கூறியுள்ளார்.
மற்றொரு டுவிட்டரில் கவர்னருக்கு இ-மெயில் அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‛‛ Rajbhavantamilnadu@gmail.com - ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும், அது அசம்பளியில்ல கவர்னர் வீடு'' என்று பதவிட்டிருக்கிறார்.