பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழல் குறித்து அவ்வப்போது தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வரும் கமல், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் கமல் கூறியிருப்பதாவது... ‛‛இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா, அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்''. என்று கூறியுள்ளார்.
சசிகலா முதல்வராக வரக்கூடாது, பன்னீர் செல்வம் தான் முதல்வாராக தொடர வேண்டும் என்று கமல் வெளிப்படையாக கூறியிருந்தார். அதன்படி, கமலின் இந்த பதிவு இடைப்பாடி வரக்கூடாது, மக்களின் நல்நம்பிக்கையான பன்னீர் செல்வமே வர வேண்டும் என்பதற்கான பதிவு தான் இது என கமல் வட்டாரங்கள் கூறுகின்றன.