இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மொய்தீன்-காஞ்சனமாலா என வரலாற்று காதல் ஜோடியாக 'என்னு நிண்டே மொய்தீன்' படம் மூலம் நம்மை கவர்ந்த பிருத்விராஜ்-பார்வதி இருவரும் மீண்டும் ஜெய்-தாரா என புதிய ஜோடியாக 'மை ஸ்டோரி' என்கிற புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.. இந்தப்படத்தை ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குனர் இயக்குகிறார். இவர் காஸ்ட்யூம் டிசைனர், ஸ்டைலிஸ்ட்டாக இருந்து இயக்குனராக மாறியுள்ளார். எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலு(ராண்டி) தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளர். ஷான் ரகுமான் இசையமைக்கிறார்.
மியூசிக், ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக இந்தப்படம் உருவாக இருக்கிறதாம். அதே சமயம் கேரளாவில் மட்டுமல்லாமல் போர்ச்சுக்கல்லிலும் இதன் படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளார்களாம். காஞ்சனமாலா கதை 1970களில் நிகழ்ந்தது என்றால், இந்தப்படத்தின் கதை தொண்ணூறுகள் மற்றும் இன்றைய தேதி என இரண்டு காலகட்டங்களில் நிகழ்கின்றனவாம்.. இயக்குனர் ரோஷினி தினகர் அடிப்படையில் நல்ல காஸ்ட்யூம் டிசைனர்.. தமிழ், தெலுங்கில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்.. அதனால் இரண்டு காலகட்டங்களிலும் பிருத்விராஜ்-பார்வதியை இருவித தோற்றங்களில் கட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டுள்ளாராம். அதேசமயம் இந்த ஜோடியின் முந்தைய பட சாயல் எதுவும் இதில் வந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொண்டு படத்தை இயக்கியுள்ளாராம்.