ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் செல்வா இயக்கத்தில் புதையல் படத்தை அடுத்து அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படம் வணங்காமுடி. இந்த படத்தில் இறுதிச்சுற்று ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் அட்டகத்தி நந்திதா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, இன்னொரு வேடத்தில் இனியா நடிப்பதாக இருந்தது. ஆனால், முதலில் அப்படத்தில் நடிப்பதாக கூறி வந்த இனியா, படப்பிடிப்புக்கு செல்லும் கடைசி நேரத்தில் விலகிவிட்டாராம்.
காரணம், ரித்திகா சிங் நாயகியாக நடிக்கும் படத்தில் தான் கேரக்டர் ரோலில் நடித்தால் இருக்கிற கொஞ்சநஞ்ச மார்க்கெட்டும் சரிந்து விடும் என்று பயப்படுகிறாராம் இனியா. அதனால் அவர் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க சில நடிகை களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாரிகா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே மேதை, அறும்பு மீசை குறும்பு பார்வை, நிராயுதம், மாயமோகினி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.